கே.வி. குப்பம் அருகே மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 21, 2023, 3:39 PM IST

Etv Bharat

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே எருதுவிடும் திருவிழாவின்போது மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் கிராமத்தில் ஜனவரி 17ஆம் தேதி எருது விடும் திருவிழா நடைபெற்றது. அதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற்றன. இந்த விழாவை பார்ப்பதற்காக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புத்தூரை சேர்ந்த வெங்கடேசன் என்னும் இளைஞர் நண்பர்களுடன் சென்றுள்ளார்.

இவர் திருவிழாவை பார்த்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக காளை முட்டியதில் பலத்த காயமடைந்தார். இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த வெங்கடேசன் இன்று (ஜன.21) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து பனமடங்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எருதுவிடும் விழாவை வேடிக்கைப் பார்க்க சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தருமபுரியில் களைகட்டிய 3ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.