வேலூரில் குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

author img

By

Published : Sep 19, 2022, 9:26 AM IST

வேலூரில் குட்டையில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு

வேலூரில் குட்டையில் குளிக்கச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் ரிக்சா காலனியைச் சேர்ந்தவர் ஜீவா. இவருக்கு ஆகாஷ் (12) மற்றும் ஹரிஷ் (11) என்னும் 2 மகன்கள் இருந்தனர். இவர்களும் அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் இமானுவேல்(13) உடன் சேர்ந்து அங்குள்ள சாய்பாபா கோயில் பின்புறம் அமைந்துள்ள குட்டைக்கு நேற்று குளிக்கச் சென்றுள்ளனர்.

சிறுவர்கள் மூவரும் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் அவர்களை தேடிச் சென்றுள்ளனர். அங்கு சைக்கிள் மற்றும் உடைகள் மட்டுமே இருந்த நிலையில் சிறுவர்கள் இல்லாததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடந்தனர்.

உடனடியாக அருகில் இருந்தவர்களின் உதவியுடன் குட்டையில் குதித்து தேடிய போது மூவரது உடலையும் மீட்டனர். இதனிடையே தகவல் அறிந்து வந்த விரிஞ்சிபுரம் காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அருவியில் குளித்த தலைமை காவலர் மூச்சுத் திணறி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.