விநாயகர் வேடமிட்டு இந்து அமைப்பினர் கோரிக்கை மனு

author img

By

Published : Sep 7, 2021, 10:42 PM IST

விநாயகர் வேடமிட்டு இந்து அமைப்பினர் கோரிக்கை மனு

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் வேடமிட்டு இந்து அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.

வேலூர்: செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை நடத்த அனுமதிக்க கோரி இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக வேலூரில் உள்ள அனைத்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பை சேர்ந்த ஒருவர் நூதனமாக கோரிக்கை மனு அளித்துள்ளார்.

விநாயகர் வேடமிட்டு இந்து அமைப்பினர் கோரிக்கை மனு
விநாயகர் வேடமிட்டு இந்து அமைப்பினர் கோரிக்கை மனு

இந்த மனுவை வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவனிடம் மனு அளித்தார்.

இதையும் படிங்க: விநாயகர் சிலையை இப்படி தயாரிங்க - ஜக்கிவாசு தேவின் அடடே யோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.