200 ஏக்கர்... அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்மணிகள் வெள்ள நீரில் நனைந்து சேதம்

author img

By

Published : Nov 12, 2021, 11:44 AM IST

அறுவடைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் நெல் பயிர்கள் ஆற்று வெள்ளநீரில் நனைந்து சேதம்

மலட்டாறு அருகே சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி வீணாகின.

வேலூர்: தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்திலும் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக வேலூர் மாவட்டம் அருகே உள்ள மலட்டாற்றில் நீர் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது.

அறுவடைக்குத் தயாராக இருந்த 200 ஏக்கர் நெல் பயிர்கள் ஆற்று வெள்ள நீரில் நனைந்து சேதம்

இதனால் மலட்டாறு அருகே பத்திரபல்லி, மசிகம், மதினாப்பள்ளி, மிட்டபல்லி, சாரங்கள், மாச்சம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி வீணாகின.

நெல் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்கக் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: மழை, வெள்ளம் பாதிப்பு - முதலமைச்சரிடம் கேட்டறிந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.