திருச்சி: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மண்டல அலுவலகத்தில் மண்டலத்தலைவர் ஆண்டாள் ராம்குமார் தலைமையில் கவுன்சிலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது மண்டலத்தலைவரின் அறையை கண்டு வியந்த கவுன்சிலர்கள்; கூட்டம் முடிந்த பின்னும் அறை எப்படி ஸ்பிளிட் ஏசி , இரண்டு ஃபேன், மரத்தால் ஆன வேலைப்பாடுகளுடன் மிளிர்ந்தது என பேசிக் கொண்டனர்.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க கோட்டத்தலைவரின் கணவருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 6ஆவது வார்டு கவுன்சிலர் கலைமணியின் மகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தன்னை உள்ளே அனுப்பவில்லையென்றால் கோட்டத்தலைவரின் கணவரை வெளியே அனுப்புங்கள் என கூச்சலிட்டாராம் கலைமணியின் மகன். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இன்னும் என்ன என்ன கூத்துகளை பார்க்கப்போகிறோம் என மாநகராட்சி ஊழியர்கள் மனதிற்குள் முனங்கியபடியே வேடிக்கை பார்த்துள்ளனர். ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இதையும் படிங்க: ஆவின் பாலகத்தில் சிகரெட் கேட்டு மதுபோதையில் கவுன்சிலர் ரகளை