மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு

author img

By

Published : Aug 4, 2022, 7:45 PM IST

மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு

திருச்சி அருகே இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற மூதாட்டியிடம் தாலி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி: மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த நல்லுச்சாமி மனைவி பாப்பு (68). இவர் தினமும் அதிகாலை 4.30 மணி அளவில் வீட்டிற்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க செல்வார்.

அதேபோல் இன்று அதிகாலை காட்டு பகுதிக்கு பாப்பு சென்றார். அங்கிருந்து ஓடி வந்த மர்ம ஆசாமி பாப்பு கழுத்தில் இருந்த 7½ பவுன் தாலி செயினை அறுத்துக் கொண்டு ஓடி உள்ளார். உடனே மூதாட்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மணப்பாறை காவல்துறையினர் மூதாட்டி கூறிய அங்க, அடையாளங்களின் படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சிசிடிவி: மதுபோதையில் கட்டையால் காவலாளியை தாக்கிய இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.