மது போதையில் பெண்களிடம் தகராறு!

author img

By

Published : Jan 14, 2022, 9:52 AM IST

drunken rioter at the Trichy Central bus stand  Police have arrested a drunken rioter at the Trichy Central bus stand  Trichy Central bus stand  மது போதையில் பெண்களிடம் தகராறு  திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மது போதையில் பெண்களிடம் தகராறு  பெண்களிடம் தகராறு  திருச்சி மத்திய பேருந்து நிலையம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், மது போதையில் பெண்களிடம் தகராறில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி: மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில், கார்த்திக், ஜெயராம், வடிவேலு ஆகிய மூவரும் குடித்துவிட்டு, பேருந்து நிலையம் வரக்கூடிய பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் பெண்களின் கைகளை பிடித்து இழுப்பதும், இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளனர். ரகளையில் ஈடுபட்ட பொழுது கீழே விழுந்து கார்த்தியின் மண்டையும் உடைந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கண்டோன்மென்ட் காவல்துறையினர், கார்த்திக்கை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, ஜெரோம் மற்றும் வடிவேலுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: VIRAL VIDEO: தள்ளுவண்டி வியாபாரியை பாஜகவினர் தாக்கும் காணொலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.