பெட்ரோல் ,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில், இன்று (பிப்.22) திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட பெறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, பரணி குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட துனை செயலாளர் குடமுருட்டி சேகர், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜி, மோகன் தாஸ், இளங்கோ உள்பட நூற்றுக்கும் மேற்பட்போர் கலந்துகொண்டனர்.
இதே போல், புதுக்கோட்டையில் திமுக சார்பில் திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கோயம்புத்தூர் மாவட்ட திமுக சார்பில் சிங்காநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் முன்னிலையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக துணைபொதுச்செயலாளர் பொன்முடி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் அவுரி திடலில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கீழ்வேளூர் சட்டப் பேரவை உறுப்பினர் மதிவாணன், திமுகவினர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி சமையல் சிலிண்டரைச் சுற்றி பெண்கள் கும்பியடித்தும், ஒப்பாரி பாடல் பாடியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!