திருப்பூரில் 4 நாள்களாக போக்குக் காட்டிய சிறுத்தை பிடிபட்டது!

author img

By

Published : Jan 27, 2022, 3:56 PM IST

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பாப்பாங்குளம் சோளக் காட்டில் இருந்து தப்பி திருப்பூர் நகருக்குள் புகுந்து 4 நாள்களாக போக்கு காட்டியச் சிறுத்தையை இன்று வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர்.

திருப்பூர்: திருப்பூர் பாப்பங்குளம் அருகே கடந்த 24ஆம் தேதி அன்று சோளக்காட்டில் சிறுத்தை ஒன்று உலவியது. அந்த சிறுத்தை 2 விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மூவரை தாக்கியது. அதன் பின்னர் அங்கு அதனை பிடிக்க வனத்துறையினர் கண்காணிப்பு காமிரா மூலம் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

வனத்துறையினர் கடும் முயற்சி மேற்கொண்டும் சிறுத்தை பிடிபடாமல் திருப்பூர் நகருக்குள் தப்பி ஓடியது. இதனையடுத்து திருப்பூர் நகரில் மேலும் 2 பேரை தாக்கியது. கடந்த 4 நாள்களாக 24 மணி நேரமும் வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், திருப்பூரில் 7 பேரை தாக்கி கடந்த கடந்த 4 நாட்களாக திணறடித்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். திருப்பூர் அம்மாபாளையத்தில் உள்ள பழைய பனியன் குடோனில் புதருக்குள் சிறுத்தை பதுங்கி இருந்தது.

நேற்று இரவு தொடங்கி தூக்கம் இல்லாமல் வனத்துறை முயன்று வந்த நிலையில் தற்போது சிறுத்தை பிடிபட்டுள்ளது. தொலைவில் இருந்து மயக்க ஊசி செலுத்திய பின் சிறுத்தையை கூண்டிற்குள் அடைத்தனர்.

இரண்டு மயக்க ஊசி செலுத்திய பின்னரே சிறுத்தை பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு- ரிசர்வ் வங்கி வருத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.