நூல் விலை கடும் உயர்வு: பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

author img

By

Published : May 16, 2022, 1:54 PM IST

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் இரு நாள் வேலை நிறுத்தம்!

இந்தியா முழுவதும் நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் இன்றும், நாளையும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகின்றன.

திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி திருப்பூரில் இன்றும் நாளையும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு 150 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பும், 100 கோடி வர்த்தக இழப்பும் ஏற்படும் எனவும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் தெரிகிறது.

இதனால் விலை உயர்வை கட்டுப்படுத்துமாறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் சிறு குறு நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் உட்பட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. கடந்த 18 மாதங்களில் நூல் விலை 240 ரூபாய் என வரலாறு காணாத அளவிற்கு ஏற்றத்திற்கு சென்றுள்ளது.

இதனால் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு அரசு தடை செய்து அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:பருத்தி, நூல் விலை உயர்வு - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.