அதிகரிக்கும் கரோனா... திருப்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!

author img

By

Published : Aug 5, 2021, 12:16 PM IST

thirupur

திருப்பூரில் கரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் வினித் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த, இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் வினித் அறிவித்துள்ளார்.

புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன:

  • அத்தியாவசிய கடைகளை தவிர, அனைத்து மளிகை கடை, காய்கறி கடை, பேக்கரி உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 முதல் மாலை 5:00 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
  • சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சூப்பர் மார்க்கெட்கள், வணிக வளாகங்கள் இயங்க தடை
  • அனைத்து மதுக்கடைகள் காலை, 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும்
  • அனைத்து பூங்காக்களிலும், ஞாயிறு மட்டும் மக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது
  • உணவகங்களில், 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த வேண்டும்
  • கேரளாவில் இருந்து வருபவர்கள் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

முன்னதாக, பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதிகளில் வணிக நிறுவனங்கள் செயல்படும் பகுதிகளில் ஆகஸ்ட் 4 முதல் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.