இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-க்காக பேருந்தை நிறுத்திய இளைஞர்கள் - முகம் சுளித்த மக்கள்

author img

By

Published : Aug 31, 2022, 11:01 PM IST

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

ஜோலார்பேட்டையில் பேருந்தை நிறுத்தி அதில் ஏறுவது போல் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் ரீல் செய்து அலப்பறை செய்த சம்பவம் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரில் இருந்து வேலூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது ஜோலார்பேட்டை கோடியூர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஆறு இளைஞர்கள் திடீரென பேருந்தை நிறுத்த கையசைத்துள்ளனர்.

உடனடியாக பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் ஆறு இளைஞர்களும் பேருந்தில் ஏறுவது போல் சென்று ஏறாமல் ஓட்டுநரை ஏமாற்றி, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சிறிது நேரம் பேருந்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்து ஓட்டுநர் புறப்பட்டுச் சென்றார்.

இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவு செய்வதற்காக இளைஞர்கள் இவ்வாறு செய்துள்ளனர். இந்நிலையில் இத்தகைய செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-க்காக பேருந்தை நிறுத்திய இளைஞர்கள் - முகம் சுளித்த மக்கள்

இதையும் படிங்க: ஆனைமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.