ஆம்பூரில் 45 வயது பெண்ணின் கண்களை தானம் செய்த குடும்பத்தினர்

author img

By

Published : Aug 6, 2022, 6:31 PM IST

இறந்தும் பார்வை பெற்ற பெண்.. ஆம்பூர் அருகே நெகிழ்ச்சி

ஆம்பூரில் 45 வயது பெண்ணின் கண்களை தானம் செய்த அவரது குடும்பத்தினர் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி (எ) ராகேல் மீனா (45). இவருக்கு ஒர் மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்றிரவு (ஆக 5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது கண்களை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்த நிலையில், இரு கண்களும் தானமாக ஒப்படைக்கப்பட்டது.இந்த செய்தி ராகேல் மீனாவின் ஊர் மக்களிடம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கஞ்சா சப்ளையர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.