கஞ்சா செடிகள் வளர்த்த நபர் கைது!

author img

By

Published : Sep 18, 2022, 7:36 PM IST

man

திருப்பத்தூர் அருகே கஞ்சா செடிகள் வளர்த்த நபரை போலீசார் கைது செய்தனர். அவர் வளர்த்த கஞ்சா செடிகளையும் அழித்தனர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த கல்லாவூர் பகுதியைச்சேர்ந்த செல்வராஜ் என்பவர், அவரது நிலத்தில் கஞ்சா செடிகள் வளர்த்து வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செல்வராஜின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை கண்டுபிடித்து அழித்தனர்.

கஞ்சா செடிகள் வளர்த்த செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குப்பன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து 92 சவரன் தங்க நகைகள் கொள்ளை - ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.