மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தூக்கிட்டு தற்கொலை

author img

By

Published : May 13, 2022, 6:27 AM IST

தற்கொலை

திருப்பத்தூர் அருகே மனைவி தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் கணவனும் தற்கொலையால் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே பெரிய குனிச்சி குறவர் காலனியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சுதாகர்(31). இவர் போச்சம்பள்ளியில் செயல்பட்டுவரும் தொழிற்பேட்டையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு பஞ்சணம்பட்டியைச் சேர்ந்த தாய்மாமன் கிருஷ்ணன்-சித்ரா மகள் ஆர்த்தியுடன் (20) முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இருவரும் குறவர் காலனியில் வசித்து வந்தனர்.

இவரது மனைவி ஆர்த்தி, கிருஷ்ணகிரியில் தனியார் கல்லூரியில் ஒன்றில் படித்து வந்துள்ளார். இதற்கிடையே கணவன் மனைவிக்குள் அவ்வப்போது குடும்ப சண்டை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (மே 11) இரவு குடும்ப சண்டை முற்றியதால், சுதாகர் பஞ்சனம்பட்டியில் உள்ள அவரது மாமியாருக்கு தொடர்புகொண்டு இதுகுறித்து பேசியுள்ளார். பின்னர் இருவரும் தூங்க சென்றனர். விடியற்காலை வழக்கம்போல் எழுந்து பார்க்கும்பொழுது அவரது மனைவி ஆர்த்தி இல்லாதது கண்டு அதிர்ந்து போய் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறி தேட ஆரம்பித்தனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

அப்பொழுது பாலா சோமேஸ்வரர் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து உடனே அதிர்ச்சி அடைந்த சுதாகர் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கந்திலி போலீசார் சுதாகர் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் கேமால் வந்த வினை - நீட் தேர்வுக்கு தயாரான மாணவர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.