ஆம்பூரில் ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணி தொய்வு

author img

By

Published : Sep 20, 2021, 8:27 AM IST

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராகேஷ்

ஆம்பூரில் ஆற்று நீரில் மூழ்கி மாயமான வாலிபரைத் தேடும் பணி, மழையின் காரணமாக தொய்வடைந்துள்ளதால் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

திருப்பத்தூர்: ஆம்பூர், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் நேற்று (செப்.19) மதியம் தனது நண்பர்களுடன் தேவலாபுரம் பகுதியிலுள்ள பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆழம் அதிகமுள்ள பகுதியில் குளித்துக் கொண்டிருந்த ராகேஷ், திடீரென ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், நீண்ட நேரமாக ராகேஷைத் தேடியுள்ளனர். இருப்பினும் அவர் கிடைக்காததால், உடனடியாக இது குறித்து ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராகேஷ்
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராகேஷ்

தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீரில் மூழ்கி மாயமான வாலிபரை நான்கு மணி நேரத்துக்கும் மேலாகத் தேடினர்.

தொடர்ந்து, அங்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியதால் இளைஞரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டு, இளைஞரை கண்டுபிடிக்க முடியாததால், அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதையும் படிங்க: உணவு டெலிவரி செய்ய வந்தவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பைக், செல்போன் பறிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.