மயங்கி விழுந்த இஸ்லாமிய பெண்ணுக்கு உதவிய காவல் துணை கண்காணிப்பாளர்

author img

By

Published : May 4, 2022, 8:10 AM IST

வாணியம்பாடி நடந்து சென்ற இசுலாமிய பெண் மயங்கி விழுந்ததால் காவல் துணை கண்காணிப்பாளர் மீட்பு

வாணியம்பாடி அருகே மயங்கி விழுந்த இஸ்லாமிய பெண்னை காவல் துணை கண்காணிப்பாளர் பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே காதர்பேட்டை ஈத்கா மைதானத்தில் நேற்று (மே 03) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்த நேரத்தில் அவ்வழியாக சாலையில் நடந்து சென்ற இஸ்லாமிய பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் உடனடியாக அப்பெண்ணை மீட்டு குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கினார்.

பின்னர் அவர், அப்பெண்ணை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியனின் இந்த செயலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

இதையும் படிங்க:காட்டுக்குள் தொலைந்த மூன்று வயது சிறுமி : 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.