ஆ.ராசாவிற்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து ஆம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Sep 19, 2022, 7:20 PM IST

Etv Bharat

இந்து மதம் குறித்து பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவிற்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து ஆம்பூரில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்: அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஆ.ராசாவைக் கைது செய்யக்கோரி ஆ.ராசாவின் உருவப்படத்திற்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து இன்று (செப்.19) ராசாவிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள விநாயகர் ஆலயம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூரில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: இந்துவாக இருக்கும் வரை சூத்திரன் தான்.. ஆ.ராசா பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.