வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சி!

author img

By

Published : Aug 1, 2022, 10:14 AM IST

வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் கொள்ளை - வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஆம்பூரில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கந்தபொடிக்காரர் தெருவை சேர்ந்தவர் அஃபான். இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை (ஜூலை 30) இரவு வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். நேற்று காலை பார்த்தபோது, இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டதில், நீண்ட நேரமாக இரு சக்கர வாகனத்தை நோட்டமிட்ட ஒருவர், சிசிடிவி கேமராவை கையால் திருப்பிவிட்டு இரு சக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் கொள்ளை - வெளியான சிசிடிவி காட்சிகள்!

இதனைத்தொடர்ந்து அஃபான், ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், நகர காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடு போவது அதிகரித்து வரும் நிலையில், நகர் முழுவதும் காவல்துறையினர் சார்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை புனரமைத்து கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: வாணியம்பாடியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத் திருட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.