தென் கொரியா பெண்ணை காதலித்து கரம்பிடித்த பொறியியல் பட்டதாரி

author img

By

Published : Sep 7, 2022, 1:36 PM IST

Etv Bharat

திருப்பத்தூர் அருகே தமிழ்நாட்டு மணமகனை காதலித்து கரம்பிடித்த தென்கொரிய மனப்பெண்.

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் பொறியியல் படிப்பு முடித்து விட்டு தென்கொரியாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

பணிபுரிந்து கொண்டிருக்கும் போதே அதே நாட்டைச் சேர்ந்த அனிமேஷன் துறையில் பணியாற்றும் சேவ்வாங்முன் என்னும் தென்கொரிய பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இருவரின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தத நிலையில், இன்று (செப். 7) வாணியம்பாடி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருவீட்டாரின் முன்னிலையில் பிரவீன்குமார் - சேவ்வாங்முன் ஆகியோரின் திருமணம் தமிழ் பாரம்பரிய முறையில் நடந்து முடிந்தது.

தமிழ்நாட்டு மணமகனை காதலித்து கரம்பிடித்த தென்கொரிய மணப்பெண்

இதையும் படிங்க: ‘தலைவன் ஒருவன் தான் என்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்’ - சசிகலாவுடன் ஈபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை முயற்சி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.