தூத்துக்குடி துறைமுக மேம்பாட்டு பணிகள் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் - அண்ணாதுரை

author img

By

Published : Sep 29, 2022, 9:26 PM IST

தூத்துக்குடி துறைமுகத்தின் மேம்பாட்டு பணிகள் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்

தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என்று செய்தி மற்றும் கள விளம்பர பிரிவின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தெரிவித்தார்.

மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தூத்துக்குடியில் ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது. அப்போது ஊடகவியலாளர்களுக்கு நேரடியாக தூத்துக்குடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக மிகப் பெரிய அளவிலான கப்பல்கள் கையாலும் வகையில் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுவரும் மிதவையானம், சரக்கு பெட்டக மேம்பாடு உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்தின் மேம்பாட்டு பணிகள் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்

அதன்பின் செய்தி மற்றும் கள விளம்பர பிரிவின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத் துறையின் கீழ் செயல்படும் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் சார்பாக தூத்துக்குடியில் ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது. இந்த பயிலரங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தனர்.

இந்த தூத்துக்குடி துறைமுகத்தை மேலும் விரிவாக்குவதன் மூலம் இந்த பகுதிக்கு மட்டுமல்ல நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். இந்த செய்தி மக்களை சென்றடையும் என்று நாம்புகிறேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் ஆம்னி பேருந்தை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.