பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட்

author img

By

Published : Aug 5, 2022, 1:04 PM IST

பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட்

கோவில்பட்டியில் அரசு கல்லூரி பேராசிரியரை தாக்கிய விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர் மற்றும் 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி: கோவில்பட்டி கிருஷ்ண நகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கணிதத்துறை பேராசிரியராக சங்கரன்கோவிலை சேர்ந்த சிவசங்கரன் பணியாற்றி வருகிறார்.

இவரை அங்கு பயிலும் மாணவர்கள் சிலர் தாக்கியதாக கூறி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பேராசிரியர் சிவசங்கரன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் 3 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட்

பேராசிரியர் சிவசங்கரன் ஒரு மாணவரின் காதல் விவகாரத்தை பெற்றோரிடம் கூறியதால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் சிவசங்கரன் மற்றும் 2 மாணவர்கள் மீது சஸ்பெண்ட் வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடி பனிமயமாதா அன்னை சப்பர பவனி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.