தூத்துக்குடி: கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் காலை முதல் காட்சியாக வைகோ குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை மதிமுக தலைமை நிலைய பொது செயலாளர் துரை வைகோ மற்றும் நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர்.
பின்னர் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசிய துரை வைகோ, "இந்த ஆவணத் திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் தலைவருக்கே தெரியாது. தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருந்த போது கட்சி வலுவாக இருந்தது; பழையபடி இழந்ததை மீட்க வேண்டும் வரலாறு படைக்க வேண்டும் என்று இத்தருணத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
நான் பல திட்டங்கள் வைத்துள்ளேன். இயக்கத்தை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும், இழந்ததை மீட்போம் வரலாறு படைப்போம் அதற்கு ஒரு செயல் திட்டம் வைத்துள்ளேன் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆவணப் படத்தை தொண்டர்கள் வீடு வீடாக தொண்டர்கள் எடுத்துச் சென்று மக்களிடம் சேர்க்கும் போது ஏன் மூத்த நிர்வாகிகள் செய்ய தயங்குகின்றனர் எனக் கூறினார்.
மேலும் இயக்கத்திற்கு உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும், மற்றவர்களுக்கு கதவு திறந்தே உள்ளது வெளியே செல்லலாம் என ஆவேசமாக பேசினார்.
இதையும் படிங்க: உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி