தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை

author img

By

Published : Nov 24, 2021, 9:34 AM IST

Updated : Nov 24, 2021, 9:45 AM IST

ஆட்டோ டிரைவர்

செல்சினி காலனி அருகே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: செல்சினி காலனி இரண்டாவது தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பார்த்த சாரதி (35). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று (நவம்பர் 23) மதியம் 3 மணியளவில் அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இரண்டு பேர் அவரிடம் திடீரென தகராறு செய்து, அரிவாளை எடுத்து, பார்த்த சாரதியை வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், பார்த்த சாரதியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் பார்த்த சாரதியின் நண்பர் பன்னீர் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் தொடர்புவைத்திருந்ததாகவும், அதனை அவரது கணவர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

அப்பெண்ணின் கணவர் கண்டித்த சமயத்தில் பார்த்த சாரதி, நண்பருடன் இருந்ததாகவும் அப்போது ஏற்பட்ட வாய்த் தகராறில் இவரை கொலைசெய்திருக்கலாம் எனக் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Last Updated :Nov 24, 2021, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.