ரேசன் அரிசி பறிமுதல்

author img

By

Published : Jul 21, 2021, 11:08 AM IST

பதுக்கி வைத்திருந்த 35 அரிசி மூடைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரேசன் அரிசியை கடத்தி ரைஸ் மில்லில் பதுக்கி வைத்திருந்த ரைஸ் மில் உரிமையாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி: கோவில்பட்டி கடலை கார தெருவிலுள்ள கண்ணன் (42) என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில்லில், ரேசன் அரிசிகள் பதுக்கி வைத்திருப்பதாக வருவாய் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்த் துறை, உணவுத்துறை, காவல் துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

அரிசி மூடைகள் பறிமுதல்

அங்கு 35 மூடைகள் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

ரைஸ் மில்லில் சோதனை செய்த அலுவலர்கள்

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பி ஓடிய ரைஸ் மில் உரிமையாளர் கண்ணன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 1800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.