திருத்துறைப்பூண்டி அருகே கனமழை பாதிப்பு; ஓபிஎஸ், இபிஎஸ் ஆய்வு!

author img

By

Published : Nov 16, 2021, 11:14 PM IST

ஆய்வு பணியில் ஈடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்பான காணொலி

திருத்துறைப்பூண்டி அருகே கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக தலைமை நிர்வாகிகளான ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே பாமினி, ராயநல்லூர், புழுதிகுடி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் கனமழையால் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்தப் பகுதிகளை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (நவ.16) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சேதமுற்ற நெற்பயிர்களைக் கண்ட பின்னர், அவர்கள் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

ஆய்வு பணியில் ஈடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்பான காணொலி

தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி, போர்வை, பாய் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை இருவரும் இணைந்து பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தரங்கம்பாடி அருகே கனமழை பாதிப்பு; ஓபிஎஸ், இபிஎஸ் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.