6 பணியாளர்களுக்கு கரோனா: ஓட்டலுக்கு நகராட்சி நிர்வாகம் சீல்!

author img

By

Published : Jan 15, 2022, 8:24 PM IST

ஓட்டலுக்கு நகராட்சி நிர்வாகம்

positive corona: ஆரணி ஓட்டலில் பணிபுரிந்த பெண் உள்பட ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் ஓட்டலுக்கு நகராட்சி நிர்வாகம் சீல்வைத்துள்ளது.

positive corona: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் தனியார் ஓட்டல் ஸ்ரீ பாலாஜி பவன் இயங்கிவருகின்றது. இந்த ஓட்டலில் சுமார் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

இந்நிலையில் இதில் பணிபுரிந்த சுமார் 22 ஊழியர்களுக்கு எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் பெண் உள்பட ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதனால் ஆரணி நகராட்சி நிர்வாகம் வருவாய்த் துறை, காவல் துறையினர் ஆகியோர் நேரில் சென்று ஓட்டலை சீல்வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து நகராட்சி ஊழியர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், நான்கு நாள்கள் ஓட்டலைத் திறக்கக் கூடாது என்றும் மருத்துவத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டு: 2ஆவது முறையாக பிரபாகரன் முதலிடம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.