தொகுதிக்கு ஒரு நெல் கொள்முதல் நிலையம் வேண்டும்; நூதன போராட்டத்தில் விவசாயிகள்!

author img

By

Published : May 13, 2023, 12:51 PM IST

தொகுதிக்கு ஒரு விளையாட்டு மையம் அமைப்பது போல் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; நூதன போராட்டத்தில் விவசாயிகள்!

தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானம் அமைப்பது போல் நெல் சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்ட, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாய சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு.

தொகுதிக்கு ஒரு விளையாட்டு மையம் அமைப்பது போல் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; நூதன போராட்டத்தில் விவசாயிகள்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த வேங்கிகால் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக தனியார் கொள்முதலுக்கு மாறியுள்ளது.

இதனால், நெல் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 80 டன் சிவில் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தனியார் நிறுவனமான NCCF மையங்களில் 20 டன் அதாவது நான்கில் ஒரு பங்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே இதனை கண்டித்து, விவசாய சங்கத்தினர் சார்பில் நூதன முறையில் கயிறு இழுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நுகர் பொருள் வாணிபக் கழகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் புருஷோத்தமன் கூறுகையில், “தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் மூலம் நாளொன்றுக்கு 80 டன் நெல், கொள்முதல் செய்யப்பட்டது. இதன் விளைவாக 2021-ல் காரிப் பருவத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்தது. ஆனால், தற்போது கடந்த 2 ஆண்டுகளாக தனியார் கொள்முதலுக்கு மாறியதால், தனியார் சென்டரில் நாள் ஒன்றுக்கு 20 டன் தான் எடுக்கின்றனர். இந்த நிர்பந்தப்படுத்துவதால் மாவட்டத்தில் இந்த ஆண்டு இலக்கு ஒன்றரை லட்சம் டன். ஆனால், பருவம் இன்னும் 20 நாளில் முடிவடையப் போகிறது. இருப்பினும் 51 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது மூன்றில் ஒரு பங்கு.

தனியார் கொள்முதலுக்கு மாறியதால் 80 டன் நாள் ஒன்றுக்கு சிவில் சப்ளை மூலம் செய்த கொள்முதல், NCCF மையங்களில் தற்போது 20 டன் அதாவது தான் நான்கில் ஒரு பங்கு தான் கொள்முதல் செய்கின்றனர். இதன் விளைவாக இலக்கு எட்ட முடியவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் இரண்டு ஆண்டுகளாக நஷ்டம் அடைந்து வருகின்றோம். இது ஒரு வேதனை, ஆட்சியினுடைய 2 ஆண்டு வேதனை. மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்று நிலத்தடி நீர் உயர்த்துவதாக கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கால்நடைக் கொட்டகைக்கு மனு கொடுத்து 48 பேர் பதிவு செய்து ஒவ்வொரு மாதம் நினைவுபடுத்த மாவட்ட ஆட்சியர் கால்நடை பட்டியலை இன்னும் வழங்கவில்லை.

இரண்டு ஆண்டுகளாக எங்கள் மனுக்களுக்கு தீர்வு இல்லை. எனவே தான் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தனியார் கொள்முதலை கைவிட்டு சிவில் சப்ளை மூலமாக கொள்முதல் செய்தால் மட்டுமே செப்டம்பருக்குள் இலக்கை எட்ட முடியும். அதனை தொடர்ந்து, இனிவரும் காலங்களில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலமாக 150 இடங்களில் கொள்முதல் செய்து சேமிப்புக் கிடங்கு கட்ட வேண்டும்.

தமிழகத்தில் தற்போது தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் கட்டுவது போல தொகுதிக்கு ஒரு சேமிப்பு கிடங்கு காட்டினால் தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். சிவில் சப்ளை மூலமாக நெல் கொள்முதல் செய்தால் தான் இந்த இலக்கை எட்ட முடியும்” என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்வோர் கழகம் முன்பாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கயிறு இழுக்கும் போட்டியை நடத்தினர்.

இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? - அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.