100ஆவது நாளைத்தொட்ட பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்புப் போராட்டம்!

author img

By

Published : Mar 31, 2022, 11:01 PM IST

100 நாட்களாக தொடரும் சிப்காட் எதிர்ப்பு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், பாலியப்பட்டு ஊராட்சியில் விளைநிலங்களை ஆக்கிரமித்து அரசின் சிப்காட் அமைய இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கிராம மக்கள் 100ஆவது நாளாகப் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், பாலியப்பட்டு ஊராட்சிப் பகுதியில் சிப்காட் அமைக்க விளைநிலங்கள் மற்றும் வீடுகளை கையகப்படுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சார்பாகத் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டம் இன்றுடன்(மார்ச் 31) 100ஆவது நாளை எட்டியுள்ளது.

100ஆவது நாளை எட்டிய சிப்காட் எதிர்ப்புப் போராட்டம்

100ஆவது நாளான இன்று, மே 17 இயக்கத்தினரும் இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பொருட்களை திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:சிப்காட் அமைப்பதற்கு எதிராக 75ஆவது நாளாகப் போராடும் பாலியப்பட்டு கிராம மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.