திருவள்ளூர் : புழலில் உள்ள ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி கோயிலில் ஜகன்னாதருக்கு 7ஆம் ஆண்டு நலங்கு வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி முதல் சனிக்கிழமையில், ஜகன்னாதருக்கு நலங்கு வைபவம் நடைபெறும்.
அந்த வகையில், கடந்த வாரம் ஸ்நான அபிஷேகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் ஜகன்னாதர், பலதேவர், சுபத்ரா ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டன.
பின்னர், சந்தனம், மஞ்சள், அர்த்தர் உள்ளிட்ட 58 வகையான மங்கள பொருட்களால் ஜகன்னாதருக்கு நலங்கு வைபவம் நடைபெற்றது.
இதையும் படிங்க : புட்லூர் ஊராட்சியில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்!