சாலையில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் தங்கச் செயின் பறிப்பு

author img

By

Published : Sep 10, 2021, 12:16 PM IST

சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: வேலூரின் சாய்நாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமாபாய் (50). அஞ்சல் துறையில் அலுவலராகப் பணியாற்றிவருகிறார். இவர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 8) தனது உறவினரின் திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

காட்பாடி ஓடைப் பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே, ரமாபாய் இரவு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், திடீரென ரமாபாய் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரமாபாய் உடனடியாக, விருதம்பட்டு காவல் துறையில் புகாரளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வுசெய்து விசாரித்துவருகின்றனர். தற்போது இது தொடர்பான காணொலி காட்சி வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: வீட்டின் கதவை உடைத்து 19 சவரன் நகை, பணம் கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.