இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணி: அந்தியோதயா விரைவு ரயில் சேவையில் மாற்றம்!
Published: Mar 16, 2023, 10:15 PM

இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணி: அந்தியோதயா விரைவு ரயில் சேவையில் மாற்றம்!
Published: Mar 16, 2023, 10:15 PM
மேலப்பாளையம் - நாங்குநேரி இடையே இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் காரணமாக, அந்தியோதயா விரைவு ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு 11 மணிக்கு அந்தியோதயா விரைவு ரயில் நாகர்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மார்க்கமாக செல்லும்.
இந்நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருவனந்தபுரம் கோட்டப் பகுதியில் மேலப்பாளையம் - நாங்குநேரி ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை பகல் நேர ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த அறிவிப்பில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தாம்பரத்தில் இருந்து மார்ச் 18ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதி வரை புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் (20691) மற்றும் மார்ச் 19ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரை, நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஆகியவை திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து வழக்கமாக புறப்படும் நேரமான மாலை 05.05 மணிக்கு தாம்பரத்துக்கு புறப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.
திருச்சி - திருவனந்தபுரம்: 'திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் (22627/ 22628) மார்ச் 19ம் தேதி முதல் மார்ச் 24ம் தேதி வரை திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி இன்டர்சிட்டி ரயில் திருநெல்வேலியில் இருந்து வழக்கமாக புறப்படும் நேரமான மதியம் 02.30 மணிக்கு புறப்படும். மார்ச் 22-ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாரம் மும்முறை விரைவு ரயில் (22657) மற்றும் நாகர்கோவிலில் இருந்து மார்ச் 23-ம் தேதி புறப்பட வேண்டிய தாம்பரம் வாரம் மும்முறை ரயில் (22658) விருதுநகர் - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - நாகர்கோவில்: 'இதேபோல, மார்ச் 23ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12667) மற்றும் மார்ச் 24 அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் வாராந்திர விரைவு ரயில் (12668) ஆகியவை விருதுநகர் - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது' என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
