சிறுத்தை உயிரிழந்த விவகாரம்: ஓபிஆர் தோட்டத்தின் மேலாளர்கள் 2 பேர் கைது

author img

By

Published : Oct 2, 2022, 8:24 PM IST

Updated : Oct 2, 2022, 9:48 PM IST

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தோட்டத்தின் மேலாளர்கள் 2 பேர் கைது

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் நிலத்தின் மேலாளர்களாக பணியாற்றும் தங்கவேல், ராஜவேல் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்து, இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

தேனி: பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை என்ற வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேலியில் கடந்த 27ஆம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கி இருப்பதாக, அதைப் பார்த்த விவசாயி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வேலியில் சிக்கியிருந்த இரண்டு வயது சிறுத்தையை காப்பாற்ற முயன்றபோது அது தானாகவே வேலியில் இருந்து தப்பி ஓடியதாகவும், தப்பிச்செல்லும்போது தேனி உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனை தாக்கி விட்டு தப்பித்துச்சென்றதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தை தாக்கியதில் மகேந்திரனின் இடது கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று பின் அவர் வீடு திரும்பினார்.

தப்பிச்சென்ற சிறுத்தை அதற்கு மறுநாளே தப்பிய இடத்தில் உள்ள அதே வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதாக, அங்கிருந்த விவசாயிகள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். வேலியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையை மீட்டெடுத்து, கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, அவசர அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்து, அதே இடத்தில் குழி தோண்டி சிறுத்தையை எரித்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மின்வேலியில் சிக்கி தப்பிய சிறுத்தை மறுநாளில், அதே மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து தேனி மாவட்ட வன அலுவலர் விரிவாக விசாரிக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கையும் விட்டிருந்தனர்.

சிறுத்தை, வேலியில் சிக்கி உயிரிழந்த இடம் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்துக்குச் சொந்தமான தோட்டம் என்பதால் வனவிலங்குகள் வருவதைத் தடுக்க, தனது தோட்டத்தைச்சுற்றி அமைத்திருந்த அந்த வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது.

இந்நிலையில் சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்த ராமநாதபுரம் மாவட்டத்தைச்சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் கைது சிறையில் அடைத்துள்ளனர்.

அதன் பின் தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை வேலியில் சிக்கிய இருந்த பகுதி மற்றும் சிறுத்தையைப் பிரேதப் பரிசோதனை செய்து எரிக்கப்பட்ட இடம் உள்ளிட்டவற்றில் நேரில் பார்வையிட்டனர்.

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தோட்டத்தின் மேலாளர்கள் 2 பேர் கைது
சிறுத்தை உயிரிழந்த விவகாரம்: ஓபிஆர் தோட்டத்தின் மேலாளர்கள் 2 பேர் கைது

இந்நிலையில் இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் கூறுகையில், வனத்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள அப்பாவிகள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, அடித்து துன்புறுத்தி, சித்திரவதை செய்து ஒத்துக்கொள்ள வைத்ததாகவும்; இது மனித உரிமை மீறல் என்றும்; இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.

சிறுத்தை உயிரிழந்த விவகாரம்: ஓபிஆர் தோட்டத்தின் மேலாளர்கள் 2 பேர் கைது

தற்பொழுது ஓ.பி. ரவீந்திரநாத், நிலத்தின் மேலாளர்களாகப் பணியாற்றும் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை செய்த பின், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:சிவகாசி அருகே பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டபோது வெடி விபத்து; இருவர் படுகாயம்

Last Updated :Oct 2, 2022, 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.