அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்: வாக்களித்த பின் ஓபிஎஸ்

author img

By

Published : Apr 6, 2021, 9:57 AM IST

dsa

தேனி: அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தேனியில் தனது வாக்கினை செலுத்தினார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள செவன்த்டே நர்சரி பள்ளியில், தமிழ்நாடு துணைமுதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அவருடன், அவரது தாயார் பழனியம்மாள், மனைவி விஜயலெட்சுமி இளையமகன் ஜெயபிரதீப், மற்றும் தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்தின் அவரது மனைவி ஆனந்தி ஆகியோரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

வாக்கு செலுத்தும் ஓபிஎஸ்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.