ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று துக்கம் விசாரிப்பு

author img

By

Published : Apr 10, 2021, 5:33 PM IST

எடப்பாடி பழனிசாமி நேரில் துக்கம் விசாரிப்பு

தேனி: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து துக்கம் விசாரித்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் (90) ஏப்ரல் 7ஆம் தேதி இரவு காலமானார். அவரது நல்லடக்கம் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல். 8) நடைபெற்றது.‌

அதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.‌ நேற்று (ஏப்ரல். 9) அமைச்சர்கள் பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் ஓ.பன்னீர்செல்வத்திடம் துக்கம் விசாரித்தனர்.

எடப்பாடி பழனிசாமி நேரில் துக்கம் விசாரிப்பு

இந்நிலையில் இன்று (ஏப்ரல். 10) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டத்திற்கு நேரில் வந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் துக்கம் விசாரித்தார்.

இதையும் படிங்க: சசிகலா நலமாக இருக்கிறார்! - டிடிவி. தினகரன் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.