குன்னூர் உழவர் சந்தை அருகே பூட்டப்பட்ட நிலையில் குப்பை கிடங்கு...

author img

By

Published : Oct 7, 2022, 10:25 AM IST

Updated : Oct 7, 2022, 11:17 AM IST

Etv Bharatஉழவர் சந்தை அருகே பூட்டப்பட்ட குப்பை கிடங்கால் நோய் தொற்று பரவும் அபாயம்

குன்னூரில் உழவர் சந்தை அருகில் பூட்டப்பட்ட நிலையில் குப்பை கிடங்கு இருப்பதால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : குன்னூர் உழவர் சந்தையில் குன்னூர் நகராட்சி சார்பாக குப்பை கிடங்கு மூலம் உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. இப்பகுதியில் சுமார் 5,000 மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.மேலும் தோட்ட தொழிலாளர்களின் வங்கி, தனியார் தங்கும் விடுதி, தனியார் மருத்துவமனையும் உள்ளன. இப்பகுதியில் இயங்கி வந்த குப்பை கிடங்கு கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளது.

உழவர் சந்தை அருகே பூட்டப்பட்ட குப்பை கிடங்கால் நோய் தொற்று பரவும் அபாயம்

இதன் காரணமாக அங்கு குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது. தற்போது அப்பகுதியில் ஈக்கள், புழுக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த பிரச்சனையில் குன்னூர் நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:பொன்னியின் செல்வன் படம் பார்க்க சென்றால் பாப்கார்ன் கட்டாயம் வாங்க வேண்டுமா? - ரசிகர் கேள்வி

Last Updated :Oct 7, 2022, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.