கோடநாடு வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை

author img

By

Published : Sep 3, 2021, 4:11 PM IST

எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் காவல் துறையினர் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினர்.

நீலகிரி: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக காவல் துறையினர் சயான், உயிரிழந்த கனகராஜ் சகோதரர் தனபாலிடம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு நேற்று (செப்டம்பர் 2) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் முன்னிலையாகவில்லை.

அரசு வழக்கறிஞர்கள் விசாரணைக்கு கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், உதகையில் பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் முன்னிலையில் இன்று (செப்டம்பர் 3) கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் முன்னிலையானார்.

எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை

அவரிடம் ரகசியமாக இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியில் வந்த நடராஜன் செய்தியாளரிடம் ஒன்றும் கூறாமல் சென்றார். அவரது வழக்கறிஞர் ராஜ்குமார், 'உங்களைப் பின்னர் சந்திக்கிறேன்' எனக் கூறி சென்றார்.

இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் முன்னுரிமை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.