கார்த்திகை பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

author img

By

Published : Dec 5, 2022, 10:19 PM IST

கார்த்திகை மாத பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

கார்த்திகை பிரதோஷத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் அமைந்துள்ள மஹா நந்தியம் பெருமானுக்கு கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு விபூதி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், கரும்புச்சாறு, பால், தயிர், சந்தனம் உள்ளிட்டப் பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மங்கள வாத்தியங்கள் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

பக்தர்களால் வழங்கப்பட்ட அருகம்புல், தாமரை, வில்வ இலை, மலர்கள் இவற்றை மாலையாக கோர்த்து நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம் பெருமானை வழிபட்டனர்.

கார்த்திகை மாத பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

இதையும் படிங்க: Gujarat Exit Poll Result: குஜராத்தில் வெல்லப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.