தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்!

author img

By

Published : Oct 8, 2021, 3:12 PM IST

Updated : Oct 8, 2021, 7:31 PM IST

Child abduction  Thanjavur Government Hospital  Thanjavur Child abduction  Child abduction in Thanjavur  Thanjavur news  Thanjavur latest news  குழந்தை கடத்தல்  கடத்தல்  தஞ்சாவூரில் குழந்தை கடத்தல்  ட்டை பையில் வைத்து குழந்தை கடத்தல்  குழந்தை

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கே நாள்களான குழந்தையை கட்டைப் பையில் வைத்து பெண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.

தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்த குணசேகரன் - ராஜலட்சுமி ஆகியோருக்கு கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமி கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டதால், தஞ்சாவூர் இராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.

ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில், பெண் ஒருவர் ராஜலட்சுமிக்கு உதவுவது போல் நடித்து, நான்கு நாள்களாக அவருடனே இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று (அக்.8) காலை, ராஜலட்சுமி குளிக்க சென்ற நேரத்தில் குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். இதையடுத்து ராஜலட்சுமி குளித்து முடித்து வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை என அதிர்ச்சியடைந்து, மருத்துவமனை முழுவதும் தேடி பார்த்துள்ளார்.

ஆனால் எங்கு தேடியும் குழந்தையை காண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இவர்களது குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டனர். இதையடுத்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இது குறித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு, குழந்தையை கடத்தியவரை தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சியில் அந்தப் பெண், குழந்தையை கட்டைப் பையில் போட்டு எடுத்துச் செல்வது போல் இருந்தது. இதை வைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சந்தேகத்திற்கிடமான முறையில் சிறுமி உயிரிழப்பு

Last Updated :Oct 8, 2021, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.