அம்பேத்கருக்கு மாலை போடுவதில் பிரச்னை - பா.ஜ.க., வி.சி.க. தொண்டர்கள் மோதல்

author img

By

Published : Dec 6, 2022, 3:51 PM IST

பா.ஜ.க. - வி.சி.க. மோதல்

போலீசாரின் தடுப்பை மீறி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பா.ஜ.க.வினருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தஞ்சாவூர்: சட்டமேதை அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அடுத்த மறியல் கிராமத்தில் அவரது உருவ சிலைக்குத் தமிழ் தேசிய முன்னேற்றக் கழகம், ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியனர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கரின் சிலைக்கு பா.ஜ.க தொண்டர்கள் மாலை அணிவிக்க வந்தனர். விடுதலைச் சிறுத்தைகள், உள்ளிட்ட கட்சியினர் பா.ஜ.க. தொண்டர்கள் மாலை அணிவிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாலை அணிவிக்க விடாததைக் கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று மணி நேரத்தையும் தாண்டி பேச்சுவார்த்தை தொடர்ந்தபோதும் உடன்பாடு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

போலீசாரின் தடுப்பை மீறி அம்பேத்கரின் சிலைக்கு பா.ஜ.க.வினர் மாலை அணிவிக்கச் சென்ற நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் தடுக்க முயன்றனர். இதனால் இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது.

கலவரத்தைக் கட்டுப்படுத்த பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் உள்ளிட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இரு தரப்பினரிடையே வாக்குவாத சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பேத்கருக்கு மாலை அணிவிப்பதில் பா.ஜ.க. - வி.சி.க.வினரிடையே மோதல்

இதையும் படிங்க: "பாஜகவுடனான உறவு முடிந்தது" - அண்ணாமலைக்கு சூர்யா சிவா அட்வைஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.