தென்காசி தீண்டாமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை

author img

By

Published : Sep 18, 2022, 9:07 PM IST

Etv Bharatதீண்டாமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை

தென்காசி தீண்டாமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்து ஐஜி அஸ்ரா கார்க் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடும் போது இரு பிரிவு இளைஞர்களுக்கும் இடையே தகராறின் போது சாதியை சொல்லி திட்டி 2 பேரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக 4 பேர் மீது (PCR)வழக்கு பதிவு செய்யப்பட்டு நெல்லை மாவட்ட 2 ஆவது செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற குழந்தைகள் திண்பண்டம் வாங்குவதற்காக பெட்டி கடைக்கு சென்றபோது அதன் உரிமையாளர் குழந்தைகளிடம் "ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும் இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம். தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள்" என கூறினார்.

இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவி வைரலானதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரன் (எ)மூர்த்தி(22) பெட்டிக் கடை உரிமையாளர் மகேஸ்வரன்(40) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

மேலும் குமார், சுதா, முருகன் ஆகிய 3 பேரைத் தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மகேஸ்வரன் பெட்டிக்கடை கடைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இந்நிலையில், இன்று (செப்-18) பாஞ்சாகுளம் கிராமத்திற்குள் தடுப்புகள் வைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டது. கிராமத்திற்குள் செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே ஊருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

ஊருக்குள் செல்லும் வாகனங்களில் எண்கள் அவரது பெயர்கள் குறிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசியல் கட்சிகள்,சமுதாய அமைப்புகள் கிராமத்திற்குள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழையத் தடை விதித்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்கள் புரியும் குற்றவாளிகளை சில காலங்களுக்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்ற கூடிய சட்ட பிரிவு (Externment provision) வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளது.

சமூக ஒடுக்குமுறையைத் தடுக்கவும், தொடர்ந்து பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அச்சட்டப்பிரிவை இவ்வழக்கில் பயன்படுத்த உள்ளதாகத் தென்மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கார்க் தகவல் முதல்முறையாக இந்த சட்ட வாய்ப்பை தமிழ்நாடு காவல்துறை பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காத கடைக்கு சீல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.