75ஆவது சுதந்திர தினம்: அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட காவலர்கள்

author img

By

Published : Aug 13, 2021, 8:52 AM IST

காவல் துறையின் அணிவகுப்பு ஒத்திகை

தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், காவல் துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

தென்காசி: நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பாக சுதந்திர தின விழா, ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளருடன் இணைந்து காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிடுவார். பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் பங்கேற்பர்.

காவல் துறையின் அணிவகுப்பு ஒத்திகை

இந்நிலையில், இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக நிகழ்ச்சியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்நிகழ்ச்சிக்கான காவல்துறையின் அணிவகுப்பு ஒத்திகை, போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது.

இதையும் படிங்க: கோவையில் நில ஆக்கிரமிப்பு செங்கல் சூளைகள் அகற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.