தென்காசி: மேலக்கடையநல்லூர் வேதக் கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கோபால் (50). இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
இவர், இதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகளிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் உறவினர்களிடம் கூறியுள்ளார்.
பெயிண்டர் அடித்துக் கொலை
இதையடுத்து, புளியங்குடி சிந்தாமணியைச் சேர்ந்த அவரது உறவினர் கருப்பையா மகன் மாரிபாண்டி(32) மற்றும் மேலக்கடையநல்லூர் வேதக் கோயில் தெருவை சேர்ந்த வேலுத்தாய் ஆகிய இருவரும் கோபால் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று அவரை கல்லால் தாக்கியுள்ளனர்.
இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கடையநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கறுப்பாக இருப்பதாகக் கூறி மனைவிக்கு ’முத்தலாக்’ : கணவர் மீது வழக்குப் பதிவு