தென்காசியில் கரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பரப்புரை

author img

By

Published : Aug 2, 2021, 6:11 AM IST

கரோனா தடுப்பு விழிப்புணர்வு

தென்காசி மாவட்டத்தில் கரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பரப்புரை வாரத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தென்காசி: கரோனா தொற்றின் 3ஆவது அலை பரவலைத் தடுக்கும்பொருட்டு கரோனா விழிப்புணர்வுப் பரப்புரை வாரத்தை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கரோனா விழிப்புணர்வுப் பரப்புரை வாரத்தை ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தொடங்கிவைத்தார்.

பரப்புரை வாரத்தின் தொடக்கமாக தென்காசி தினசரி சந்தையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக கரோனா தடுப்பூசி, முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்டவற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கும், வியாபரிகளுக்கும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.