சிவகங்கையை அடுத்துள்ளது, மாத்தூர் கிராமம். இங்குள்ள ஸ்ரீ மணியாருடைய அய்யனார் கோயிலுக்கு சொந்தமான காளை, இக்கிராம மக்கள் மத்தியில் தெய்வமாக வலம்வந்தது. இந்நிலையில் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
இந்நிலையில் இன்று கிராம மக்கள் சார்பில் அதற்கு சிறப்புப்பூஜைகள் செய்து, தாரை தப்பட்டை முழங்க பெரிய வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச்சென்று இறுதிச்சடங்கு செய்தனர்.
ஊர்வலமாக எடுத்து செல்லும்போது வழி நெடுக கிராம மக்கள் மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். உயிரிழந்த கோயில் காளைக்கு கிராம மக்கள் இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கணவர் உயிருடன் இருக்கும்போதே இறப்பு சான்றிதழ் பெற்று சொத்துக்களை சூறையாடிய மனைவி