Video Leak:நகராட்சிப்பணியாளர்களிடம் வீட்டு வேலை வாங்கும் நகராட்சி ஆணையர்

author img

By

Published : Sep 20, 2022, 7:12 PM IST

நகராட்சிப் பணியாளர்களிடம் வீட்டு வேலை வாங்கும் நகராட்சி ஆணையர் : வீடியோ வைரல்

தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் சாந்தி, நகராட்சிப்பணியாளர்கள் எட்டு பேரை, தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாவட்டச்செயலாளர் காமராஜர் புகார் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை: தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் சாந்தி, கடந்த நான்கு மாதங்களாக ராம்நகர் ஆணையர் குடியிருப்பில் வசித்து வருகிறார். தனது பிள்ளைகளை பார்த்துக்கொள்ள, சமைக்க, துணி துவைக்க, வீடு பராமரிக்க உள்ளிட்டப் பல்வேறு வேலைகளை நாள்தோறும் செய்திட அவர் நகராட்சி பணியாளர்களைப் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நகராட்சிப்பணியாளர்களான பானுமதி, சுப்புலட்சுமி, வள்ளி, நாகராணி ஆகிய 8 பேரை நகராட்சிப் பணியில் ஈடுபடுத்தாமல் தனது வீட்டுக்கே வேலைசெய்யும் கொத்தடிமைகளாக நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், சென்னைக்கும், கோவைக்கும் நகராட்சி வாகனத்தை எடுத்துக்கொண்டு மாதம் இருமுறை சென்று தங்கி வருவதாகவும், நகராட்சி அலுவலக உதவியாளர் முருகன் மூலமாக புதிய புதிய வரி விதிப்பது, கட்டட அனுமதி, பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, அனைத்து சான்றிதழ்கள் எனப் பட்டியல் போட்டு வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் பல எழுந்துள்ளன.

மேலும், இவர் நகராட்சியில் பல லட்சம் வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாவட்டச்செயலாளர் காமராஜர் புகார் தெரிவித்துள்ளார்.

நகராட்சிப் பணியாளர்களிடம் வீட்டு வேலை வாங்கும் நகராட்சி ஆணையர் : வீடியோ வைரல்

இந்நிலையில் நகராட்சி ஊழியர்கள், ஆணையாளர் வீட்டில் வேலை செய்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: கீழடி அகழாய்வு; முதன்முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல் கண்டெடுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.