அரசுப் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: கணவன், மனைவி உயிரிழப்பு

author img

By

Published : Feb 2, 2022, 6:17 AM IST

அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து

சிவகங்கை அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிவகங்கை: மறமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரகாளி. இவர் தனது மகளை கோயம்புத்தூரில் உள்ள கல்லூரிக்கு மதுரையிலிருந்து பேருந்தில் ஏற்றி அனுப்பிவைத்துவிட்டு சொந்த ஊர் நோக்கி மனைவி கவிதாவுடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சிவகங்கை - மதுரை நெடுஞ்சாலையில் சித்தாலங்குடி என்ற இடத்தில் மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீரகாளி, கவிதா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அரசுப் பேருந்தில் சென்ற 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பூவந்தி காவல் துறையினர் உயிரிழந்தவர்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய பஞ்சாப் எம்எல்ஏ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.