விநாயகர் சிலை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள்

author img

By

Published : Sep 8, 2021, 7:57 PM IST

விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் சிலைகள் தயாரிக்கும் பணியில் ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை: நாடு முழுவதும் வருகிற 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

இருப்பினும் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை பக்தர்கள் சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர். இதையொட்டி வீடுகளில் வைத்து பக்தர்கள் வழிபடுவதற்கு ஏற்றாற்போல் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி

வண்ண வண்ண சிலைகள்

அந்த வகையில் சிவகங்கை அருகே சுண்ணாம்பு காலவாசல் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சாலையோரம் கூடாரம் அமைத்து, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தயாரித்த வண்ண, வண்ண சிலைகளை சாலையோரமாக விற்பனைக்கு வைத்துள்ளனர். அப்பகுதியைக் கடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.

இதில், கற்பக விநாயகர், செல்வ விநாயகர், வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர், சக்தி விநாயகர், மும்மூர்த்தி விநாயகர், நவசக்தி விநாயகர், கன்னிமூல விநாயகர் உள்ளிட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: விநாயகர் ஊர்வலம்: தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.