அதிமுகவுக்கு யார் பொதுச் செயலாளர் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்... சசிகலா!!

author img

By

Published : Sep 13, 2022, 8:57 AM IST

அதிமுகவுக்கு யார் பொதுச் செயலாளர் ஆகிறார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்

அதிமுகவுக்கு யார் பொதுச் செயலாளர் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் புரட்சி பயணம் மேற்கொண்ட சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நான் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வரும் வரைக்கும் அனைவரும் ஒன்றாக தான் இருந்தார்கள்.

அப்போது நான் சொன்னது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கூறினேன். என்னுடைய வார்த்தை எப்போதும் ஒரே மாதிரியான வார்த்தையாக தான் இருக்கும்.

ஆனால் ஒரு கட்டத்தில் அனைத்தும் சீரானது கழகம் ஒன்றாக சேர வேண்டும் என்பதற்காக அனைத்தையும் ஏற்றுக் கொள்வது தான் நல்லது. சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் மின் கட்டணம் தற்போது உயர்ந்துள்ளது. தொடர்ந்து 15 மாதங்களாக மக்களை கசக்கிப் பிழிகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் யார் பொதுச் செயலாளர் என்ற கேள்விக்கு பதில் கூறுகிறேன். பொறுத்திருந்து பாருங்கள் இன்னொரு வழக்கு நிலுவையில் உள்ளது. வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றியை பெறும். அதற்கு உண்டான பணிகளை நான் செய்து வருகிறேன். திமுகவை பொறுத்தவரை மக்கள் வெறுத்துப் போய் உள்ளனர்" என்றார்

அதிமுகவுக்கு யார் பொதுச் செயலாளர் ஆகிறார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்

கொடநாடு கொலை வழக்கு குறித்த கேள்விக்கு, விசாரணை செய்து வருகின்றனர் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதை நீங்கள் தான் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். அம்மாவுடைய மரணத்தில் மற்றவர்களெல்லாம் அரசியல் செய்து பார்க்கிறார்கள். ஆனால் மக்களுக்கு உண்மை எது என்று தற்போது புரிந்து விட்டது அதுவே எனக்கு போதும்" என்றார்.

இதையும் படிங்க: நடிக்க வைப்பதாக கூறி ஆபாச போட்டோ எடுத்த விவகாரம்...வாக்குமூலம் கொடுத்த போலி இயக்குநர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.