தனியார் பேருந்து மோதி கணவர் மரணம்; கைக்குழந்தையுடன் கதறி அழுத பெண்!

author img

By

Published : Jan 28, 2023, 9:56 PM IST

Etv Bharat

வாலாஜாபேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது தனியார் பேருந்து மோதியதோடு, பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் இளைஞர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அடுத்த வள்ளுவம் பாக்கம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ் (30). திருமணமாகி கைக்குழந்தை மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இவர், பனப்பாக்கம் பகுதியில் சொந்தமாக ஜூஸ் கடை ஒன்று வைத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில், இவரது கைக்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தனது மனைவி மற்றும் குழந்தை, உறவினர் ஒருவர் ஆகியோரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, சுபாஷ் தனது இருசக்கர வாகனத்தில் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றார்.

அப்போது, சோளிங்கர் செல்லும் சாலை அருகே வந்தபோது சோளிங்கரிலிருந்து ‌அதிவேகமாக வந்த பாரதி மோட்டார்ஸ் தனியார் பேருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த சுபாஷ் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுபாஷின் வலது மார்பு பகுதியில் பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை காவல் துறையினர், சுபாஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திய பேருந்தை காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் 2 பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.